சிலுவைப்பாதை பாடல் எனக்காக இறைவா எனக்காக




எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக

1. பழிகளைச் சுமத்தி பரிகசித்தார் - உயிர்
பறித்திட எண்ணி தீர்ப்பளித்தார்

2. தாளாச் சிலுவை சுமக்க வைத்தார் - உம்மை
மாளாத் துயரால் துடிக்க வைத்தார்

3.விழுந்தீர் சிலுவைப் பளுவோடு மீண்டும்
எழுந்தீர் துயர்களின் நினைவோடு

4.தாங்கிட வொண்ணாத் துயருற்றே - உம்மைத்
தாங்கிய அன்னை துயருற்றாள்

5.மறுத்திட முடியா நிலையாலே - சீமோன்
வருத்தினார் தன்னை உம்மோடு

6. நிலையாய் பதிந்தது உம் வதனம் - அன்பின்
விலையாய் மாதின் சிறுதுணியில்

7. ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததினால் - அந்தோ
  சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும்

8. விழிநீர் பெருக்கிய மகளிருக்கு அன்பு
மொழிநீர் நல்கி வழி தொடர்ந்தீர்

9. மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் - கால்
ஊன்றி நடந்திடும் மெய் நொந்தீர்

10.உடைகள் களைந்திட உம்மைத் தந்தீர் - இரத்த
மடைகள் திறந்திட மெய் நொந்தீர்

11. பொங்கிய உதிரம் வடிந்திடவே உம்மைத்
தொங்கிடச் செய்தார் சிலுவையிலே

12. இன்னுயிர் அகன்றது உம்மைவிட்டு பூமி
இருளினில் ஆழ்ந்தது ஒளிகெட்டு

13. துயருற்றுத் துடித்தார் உளம்நொந்து அன்னை
உயிரற்ற உடலினை மடிசுமந்து

14. ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு நீர்
அடங்கிய கல்லறை உமதன்று


Post a Comment

0 Comments