Tuesday, 12 May 2020

சிரிக்க! மகிழ! சிந்திக்க!

பதிவு 2

                மருத்துவரின் மறதி 

      ஒரு நோயாளிக்கு வயிற்றில் அறுவை மருத்துவம் நடத்தப்பட இருந்தது. அவருடைய பக்கத்திலிருந்தவர் 'இந்த டாக்டர் மிகவும் ஞாபக மறதி கொண்டவர்É முன்பு ஒரு சமயம் அறுவை மருத்துவம் செய்த போது வயிற்றின் உள்ளே கத்தரிக்கோலை வைத்துத் தையல் போட்டு விட்டார். அதனால் மறுபடியும் அந்த நோயாளியின் வயிற்றை அறுவை செய்ய வேண்டியதாகி விட்டது" என்று சொன்னார்.
     அந்த நோயாளியின் வயிற்றில் அறுவை செய்யப்பட்டது அவரை வெளியே கொண்டு வந்தார்கள். அவரது மயக்கம் தெளிந்தது. தன்னை விசாரிக்கவே அவர் வருகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்த நோயாளியிடம், 'எனது கையுறை காணவில்லையே" என்று சொன்னார் அவர், நோயாளி உடனே மயக்கம் அடைந்தார்.

Daily Divine Digest Philosophical thought for Everyday

May 12

                                        The Inner Light

      Man is blessed with the inner light. The physical eye does not and cannot see it. The light within cognizes itself. It cognizes the things outside.

      The inner light is constant. It reveals itself through the glass of the mind. The defects in the mind seemingly blur the light within. But actually, the light remains ever unaffected by the modifications of the mind. Man ought to ignore the limitations of the mind and seek to get fixed in the inner light.

        Lord you are the inner Light; lead me to the inner Light.

-                                                             - Vedanta


Monday, 11 May 2020

சிரிக்க! மகிழ! சிந்திக்க!

 
பதிவு 1 
                                         படிக்காத நாய்

                  ஒரு பெண், தன் வீட்டில் ஒரு நாய்க் குட்டியை வளர்த்துக் கொண்டிருந்தாள். அது தண்ணீர் குடிப்பதற்காக ஒரு சிறிய கிண்ணம் வாங்கக் கடைக்குப் போனாள். கடைக்காரன் இரண்டு கிண்ணங்களை எடுத்து வைத்தான். ஒன்றில் 'நாய் குடிக்கும் கிண்ணம்" என்று எழுதப்பட்டிருந்தது. மற்றொன்றில் எதுவும் எழுதப்படவில்லை. அவன் 'நாய் குடிக்கும் கிண்ணம்" என்பதை அவளிடம் எடுத்துக் கொடுத்து, அதையே வாங்கிக் கொள்ளும்படி அறிவுரை கூறினான். 'என்னுடைய நாய்க்குப் படிக்கத் தெரியாது. அது மிகவும் குட்டி" என்று சொல்லிவிட்டு எழுத்தில்லாத கிண்ணத்தையே எடுத்துக் கொண்டாள் அவள்.  

Daily Divine Digest Philosophical Thoughts for Everyday

May 11

                                                   Peace 

                              All beings love peace because it is their original state. It is in peace alone that social progress is possible.Peace is the criterion for mutual understanding and cordial relationship. 
                 Elements in nature are usually at peace. Occasionally they are in turmoil, pressed hard for readjustment. Beings resort to strife because of compulsion. Peacemakers among men are the salt of the earth.

                        Peace follows enlightenment. When man establishes peace at heart no external force can disturb it.
                                                                               - Vedanta  

Friday, 1 May 2020

ஜெபமாலை ஜெபங்கள் திருத்திய மொழிபெயர்ப்பு



நம்பிக்கை அறிக்கை
   விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
இவர் தூய ஆவியால் கருவுற்று கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் படுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார். அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். தூய ஆவியாரை நம்புகின்றேன். புனித , கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன். பாவ மன்னிப்பை நம்புகின்றேன். உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன். நிலை வாழ்வை நம்புகின்றேன். ஆமென்
இயேசு கற்பித்த செபம்
விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுப் போல, மண்ணுலகிலும் நிறைவேறுக.
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும் எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். –ஆமென்.


 மங்கள வார்த்தை செபம்
அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசீ பெற்றவர் நீரே, உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீ பெற்றவரே

புனித மரியே, இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.


திருத்துவப் புகழ்
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாகஃ தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.


பாத்திமா அன்னை செபம்:
ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும் உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ, அவர்களுக்கு சிறப்பான உதவி புரியும்.


இறுதி செபம்
அதிதூதரான தூய மிக்கேலே, வானதூதர்களான தூய கபிரியேலே, இரஃபேலே திருத்தூதர்களான தூய பேதுருவே, பவுலே, யோவானே, யாக்கோபே, நாங்கள் எத்தனை பாவிகளாய் இருந்தாலும், நாங்கள் மன்றாடிய இந்த ஐம்பத்து மூன்று மணி செபத்தையும் உங்கள் புகழ்ச்சியோடு ஒன்றாகச் சேர்த்துத் புனித அன்னை மரியாவின் திருப்பாதத்தில் காணிக்கையாக வைக்க உங்களை மன்றாடுகிறோம் – ஆமென்


Thursday, 16 April 2020

தோளில் சிலுவை நெஞ்சில் கொள்கை சிலுவைப்பாதை பாடல்



தோளில் சிலுவை நெஞ்சில் கொள்கை 
சுமந்தே இயேசு போகின்றார்
துணிந்து தேவன் போகின்றார்

1 முதலாம் நிலையில் அரண்மனைதனிலே
நீதியின் வாயில் மூடியதாலே
முள்முடி தரித்து உலகை நினைத்து
அநீத தீர்ப்பை ஏற்றுக்கொண்டாரே.

2 இரண்டாம் நிலையில் பளுவான சிலுவையை
அவனியில் வாழும் அனைவருக்காகவும்
தாமே அணைத்து தோளில் இணைத்து
கொடியதோர் பயணம் ஏற்றுக்கொண்டாரே.

3 மூன்றாம் நிலையில் முதல் முறையாக
முடியா நிலையில் நிலை தடுமாறி
தரையில் விழுந்து மண்ணை முகர்ந்து
எழுந்து நடந்திட ஆற்றல் பெற்றாரே.

4 நான்காம் நிலையில் தளர்வுற்ற மகனை
தாய்மரி கண்டு தேற்றுகின்றாரே
உலகம் விடிந்திட தீமை அழிந்திட
வீரத்தாய் அவள் விடை கொடுத்தாளே.

5 ஐந்தாம் நிலையில் சுமைதனை பகிர்ந்திட
சிரேன் நகரத்து சீமோன் உதவிட
உதவும் பாடத்தை உயர்ந்த வேதத்தை
உலகிற்கு சீமோன் எடுத்துச் சொன்னாரே.

6 ஆறாம் நிலையில் ஆண்டவர் முகத்தை
துடைத்திட விரோணிக்காள் துணிந்து விட்டாரே
பூமியில் பெண்கள் துணிச்சலின் தூண்கள்
என்பதை விரோணிக்காள் உணர்த்தி விட்டாரே.

7 ஏழாம் நிலையில் இரண்டாம் முறையாய்
பூமியில் விழுந்தார் விடியலின் விதையாய்
மண்ணில் விழாமல் மறுபடி எழாமல்
கோதுமை மணியும் பயனளிக்காதே.

8 எட்டாம் நிலையில் எருசலேம் வீதியில்
ஆறுதல் அளித்தனர் கருணையின் மகளிர்
அழுவதை நிறுத்தி அநீதியை எதிர்த்து
குரல் கொடுப்பதுவே ஆறுதல் ஆகும்.

9 ஒன்பதாம் நிலையில் மூன்றாம் முறையாய்
முழு முதல் தலைவன் வீழ்ந்திடலானார்
பாரம் அழுத்த சோகம் வருத்த
லட்சிய தாகத்தால் துடித்தெழுந்தாரே.

10 பத்தாம் நிலையில் அவமான சிகரத்தில்
அணிந்துள்ள ஆடையை அகற்றியதாலே
யாவும் இழந்து தலையை கவிழ்ந்து
லட்சிய ஆடையை உடுத்தி நின்றாரே.

11 பதினொன்றாம் நிலையில் மாசற்ற இயேசுவை
சிலுவையில் அறைந்தனர் தீமையின் ஏவலர்
பாவம் ஒருபுறம் பழியோ மறுபுறம்
இதுதான் உலகின் நடைமுறை பாடம்.

12 பனிரெண்டாம் நிலையில் கள்வரின் நடுவில்
கொடூரமாய் இயேசு உயிர் துறந்தாரே
போராளி இறப்பில் போராட்டம் வலுப்பெறும்
இதுதான் விடியலின் வைகறை கோலம்.

13 பதிமூன்றாம் நிலையில் மரியாவின் மடியில்
மரித்த மகனுக்கு தாலாட்டுப் பாட்டு
தாயின் மடிதான் என்றென்றும் தஞ்சம்
தரணிக்கு முழுவதும் இதுதான் வேதம்.

14 பதினான்காம் நிலையில் கல்லறை தனிலே
இயேசுவின் உடலை அடக்கம் செய்தாரே
கருவறை தொடங்கி கல்லறை வரைக்கும்
தொடர்ந்திடும் பயணம் உன்கதை கூறும்.


                
          
                       

சிலுவைப்பாதை பாடல் எனக்காக இறைவா எனக்காக




எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக

1. பழிகளைச் சுமத்தி பரிகசித்தார் - உயிர்
பறித்திட எண்ணி தீர்ப்பளித்தார்

2. தாளாச் சிலுவை சுமக்க வைத்தார் - உம்மை
மாளாத் துயரால் துடிக்க வைத்தார்

3.விழுந்தீர் சிலுவைப் பளுவோடு மீண்டும்
எழுந்தீர் துயர்களின் நினைவோடு

4.தாங்கிட வொண்ணாத் துயருற்றே - உம்மைத்
தாங்கிய அன்னை துயருற்றாள்

5.மறுத்திட முடியா நிலையாலே - சீமோன்
வருத்தினார் தன்னை உம்மோடு

6. நிலையாய் பதிந்தது உம் வதனம் - அன்பின்
விலையாய் மாதின் சிறுதுணியில்

7. ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததினால் - அந்தோ
  சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும்

8. விழிநீர் பெருக்கிய மகளிருக்கு அன்பு
மொழிநீர் நல்கி வழி தொடர்ந்தீர்

9. மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் - கால்
ஊன்றி நடந்திடும் மெய் நொந்தீர்

10.உடைகள் களைந்திட உம்மைத் தந்தீர் - இரத்த
மடைகள் திறந்திட மெய் நொந்தீர்

11. பொங்கிய உதிரம் வடிந்திடவே உம்மைத்
தொங்கிடச் செய்தார் சிலுவையிலே

12. இன்னுயிர் அகன்றது உம்மைவிட்டு பூமி
இருளினில் ஆழ்ந்தது ஒளிகெட்டு

13. துயருற்றுத் துடித்தார் உளம்நொந்து அன்னை
உயிரற்ற உடலினை மடிசுமந்து

14. ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு நீர்
அடங்கிய கல்லறை உமதன்று


"சிறிய நம்பிக்கை"

    ஒரு சிறிய கிராமத்தில் மீரா என்ற சிறுமி இருந்தாள். அவளது தந்தை ஒரு விவசாயி. அவர்கள் குடும்பம் மிகவும் எளிமையாக வாழ்ந்தது. மீரா புத்திசால...